Wednesday, July 28, 2010

ஆணவம் பிடித்த அசின் என்ற நடிகையின் படத்தை மலேசியாவில் திரையிடக்கூடாது.
மலேசிய தமிழ் திரைப்பட வினியோகப்பாளர்களுக்கு பினாங்கு தமிழ் இளைஞர் நடவடிக்கை இயக்கம் வேண்டுகோள்


இலங்கையின் வடக்கிழக்கில், ஈழத்தமிழர்களை கொன்று குவித்து, தமிழர்களின் உரிமைப்போராட்டத்தை உலக வல்லரசுகளின் உதவியோடு ஆயுத பலம் கொண்டு நசுக்கிய கொடுங்கோலன் இராஜபக்சேவின் குடுமபத்தினரோடு கூடி, களித்து கும்மாளமடித்து திரியும் அசின் என்ற திமீர் பிடித்த நடிகையின் படத்தை மலேசியாவில் திரையிடக்கூடாது என்று மலேசிய தமிழ் திரைப்பட வினியோகப்பாளர்களிடமும், திரையரங்க உரிமையாளர்களிடமும் பினாங்கு தமிழ் இளைஞர் நடவடிக்கை இயக்கம் தாழ்மையுடன் வேண்டுகோள் விடுக்கின்றது.

இலங்கை என்றாலே, சிங்கள பேரினவாதமும், சிங்கள இனவெறித்தனமும்தான் நமது நினைவுக்கு வரும். கடந்த பல்வேறு காலங்களிலும், இலங்கையில் வாழ்ந்த தமிழர்களை, தங்களின் இனவெறி தாக்குதல்களுக்கு உட்படுத்தி இன அழிப்பு நாடகத்தை நடத்தி வந்தது. இலங்கை பேரினவாதத்தை தட்டிக்கேட்க ஈழத்தில் பல அமைப்புகள் பிறந்த பொழுதிலும், மாவீரன் தலைவர் பிரபாகரனின் விடுதலைப்புலிகள் இயக்கம் பதிலடி கொடுக்கத் தொடங்கிய பிறகே அந்த இனவெறி ஆட்டங்கள் சற்று தனிந்தன. இவ்வேளையில், ஈழத்தமிழர்களுக்கு தனித்தமிழீழம் ஒன்றே தீர்வு என்று போராடிய அந்த விடுதலை அமைப்பை அழித்துவிட வேண்டும் என்று, இந்திய உள்ளிட்ட பலம்பொருந்திய உலக வல்லரசுகளின் ஒத்துழைப்போடு, கடந்த 2009ஆம் ஆண்டு, இலங்கையின் கிழக்கில், முள்ளிவாய்க்கால் என்ற பகுதியில் ஒரு இன அழிப்பு நாடகத்தை நடத்தி முடித்தது இலங்கையின் இனவெறி அரசு. விடுதலைப்புலிகளுக்கெதிரான போர் என்ற போர்வையில், ஒட்டு மொத்த ஈழத்தமிழினத்தையே அழிக்கப்பார்த்தான் ராஜபக்சே என்ற கொடுங்கோலன்.

முள்ளிவாய்க்காலில் நடந்த இறுதிப்போரின் போது ஆயிரக்கணக்கான தமிழர்களை படுகொலை செய்த இலங்கை இனவெறி அரசு, அத்தோடு தனது இன அழிப்பு படலத்தை நிறுத்திவிடாமல், ஈழத்தமிழர்களை தமது சொந்த மண்ணிலேயே அகதிகாளாக ஆக்கி விட்டுள்ளது. முள்வேலி முகாம்களுக்குள் ஈழத்தமிழர்கள் படும் கொடுமையை வார்த்தையில் விவரிக்க முடியாது என அண்மையில் கூட இலங்கைக்கு சென்று வந்த சிலாங்கூரை சேர்ந்த தமிழன் உதவும் கரங்கள் அமைப்பின் தோழர்கள் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. அதோடு மட்டுமல்லாமல், இலங்கை இராணுவம் கடும் போர்க்குற்றங்களை புரிந்திருப்பதாக கூறி உலக நாடுகளின் அழுத்தத்திற்கு பிறகு, ஐக்கிய நாடுகள் சபையே இலங்கையின் போர் குற்றங்களை விசாரிக்க சிறப்பு நிபுணர் குழுவை அமைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நிலைமை இவ்வாறு இருக்க, தனது போர்க்குறங்களையும், இன அழிப்பு படலத்தையும் மூடி மறைக்க இலங்கை அரசு கடுமையாக முயன்று வருகின்றது. அதன் காரணமாகவே, இலங்கையில் அனைத்துலக திரைப்பட விருதளிப்பு நிகழ்வை நடத்தியது. பெரும் நடிகர் பட்டாளமே திரளும் என்று காத்திருந்த இலங்கை அரசுக்கு கிடைத்தது பெரும் ஏமாற்றம்தான். இந்தி திரையுலகின் மூத்த நடிகரான அமிதாப் பச்சன், அவரது மகன் அபிஷேக் பச்சன், மறுமகள் ஐஸ்வர்யா ராய் என புகழ்பெற்ற இந்தி திரைப்பட நடிகர்கள், அண்ணன் சீமானின் நாம் தமிழர் அமைப்பின் வேண்டுகோளுக்கிணங்க அந்த விழாவை புறக்கணித்தனர். தென்னகத்து நடிகர்களான ரஜினிகாந்த, கமலஹாசன், சிரஞ்சீவி, மம்முட்டி என அனைவருமே இலங்கை இனவெறி அரசின் அழைப்பை புறக்கணித்தனர். ஈழத்தமிழர்கள் படும் இன்னல்களைக் கண்டே அவர்கள் அவ்வாறு முடிவெடுத்தனர் என கூறலாம்.

நிலைமை இவ்வாறு இருக்க, இலங்கைக்கு படபிடிப்புக்கு செல்கிறேன் என்று கூறிக்கொண்டு, இலங்கையின் கொடுங்கோலன் ராஜபக்சேவின் குடும்பத்தினரோடு சேர்ந்து தமிழர்கள் இருக்கும் மருத்துவமனைகளுக்கு சென்று புகைப்படத்துக்கு போஸ் கொடுக்கும் அசின், இலங்கை அரசின் பிரச்சார கருவியாக செயல்படுகிறார். இலங்கையில் இன அழிப்பு நடக்கவேயில்லை என்று பிரச்சாரம் செய்யும் நோக்கத்திலேயெ, இலங்கை இனவெறி அரசு தற்பொழுது நடிகர், நடிகையரை தம் வசம் இழுக்கும் செயலில் இறங்கியுள்ளது. இலங்கை இனவெறி அரசின் வஞ்சகத்தனத்தை உணர்ந்துதான், இந்தியாவின் தலைசிறந்த நடிகர்கள், தமிழகத்துக்கு கொஞ்சமும் தொடர்பில்லாத அமிதாப் பச்சன் உட்பட இலங்கை அரசின் அழைப்பை புறக்கணித்திருக்கிறார்கள். இவ்வேளையில், இலங்கை அரசின் பிரச்சார பொம்மையாக செயல்பட்டது மட்டுமின்றி, அவரின் முட்டாள்தனமான செயலுக்கு மன்னிப்பும் கேட்க மாட்டேன் என்றும், ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் திமீராக பேசும் அசின் என்ற ஆணவக்காரியின் திரைப்படங்களை மலேசியாவில் திரையிட வேண்டாம் என்று, மலேசியாவில் உள்ள தமிழ் திரைப்பட வினியோகஸ்தர்களிடமும், திரையரங்கு உரிமையாளர்களிடமும் தாழ்மையான வேண்டுகோள் விடுக்கின்றோம்.

இதன் தொடர்பாக, மலேசியாவில் தமிழ் திரைப்படத்தை வினியோகம் செய்யும் முன்னணி நிறுவனங்களான லோட்டஸ் பைஃப் ஸ்டார் மற்றும் பிரமிட் சய்மீரா ஆகிய நிறுவனங்களுக்கு எமது கோரிக்கை மனுவை விரைவில் அனுப்புவோம். லோட்டஸ் பைஃப் ஸ்டார் மலேசியாவின் தலைசிறந்த திரைப்பட வினியோகஸ்தர்கள். வள்ளல் ரெனாவின் புதல்வர்கள் இந்நிறுவனத்தை நிர்வகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. வள்ளல் ரெனாவின் வழிவந்த அவர்தம் புதல்வர்கள், தமது தந்தையைப் போலவே, மலேசியத்தமிழர்களின் உணர்வுகளுக்கும், உலகத் தமிழர்களின் மனவோட்டத்துக்கும் கண்டிப்பாக மதிப்பளிப்பார்கள் என்ற நம்பிக்கை எமக்கு உள்ளது. அதைப்போலவே, பிரமிட் சய்மீரா நிறுவனத்திற்கு பொறுப்பேற்றிருக்கும் வேள்பாரி சாமிவேலு அவர்களும், இந்த விவகாரத்தில் அரசியல் எல்லைகளைத் தாண்டி, தமிழர்களின் மனவோட்டத்தை மதிப்பளிக்க வேண்டும் என்று பினாங்கு தமிழ் இளைஞர் நடவடிக்கை இயக்கம் நம்புகின்றது. நன்றி.

“தமிழ் வாழும் வரை, தமிழன் வாழ்வான்”
“தமிழன் வாழ்ந்தால்தான், தமிழே வாழும்”

இங்கனம்,

________________________
சத்தீஸ் முனியாண்டி,
அமைப்புத் தலைவர்,
பினாங்கு தமிழ் இளைஞர் நடவடிக்கை இயக்கம்

Tuesday, March 30, 2010

அரசியல் என்பது மாபெரும் புத்தகம், அதில் நான் எப்பொழுதும் பாடம் கற்கும் மாணவன்தான், வேண்டுமென்றால் தினகரனுக்கு அதை கற்றுக் கொடுக்கவும் நான் தயார்

அரசியல் என்பது மாபெரும் புத்தகம், அதில் நான் எப்பொழுதும் பாடம் கற்கும் மாணவன்தான், வேண்டுமென்றால் தினகரனுக்கு அதை கற்றுக் கொடுக்கவும் நான் தயார். மாபெரும் அரசியல் மேதை தினகரனுக்கு சத்தீஸ் முனியாண்டி பதில்.
நேற்றைய தமிழ் நாளிதழ் (மலேசிய நண்பன் 29.03.2010) ஒன்றில், அரசியல் அரிச்சுவடி தெரியாத சத்தீஸ் முனியாண்டி என்ற தலைப்பில், அறிக்கை விடுத்திருக்கிறார் பினாங்கு மாநில மாநில மஇகா இளைஞ்சர் பகுதி தலைவர் தினகரன். பினாங்கு மாநில மஇகா தலைவரான டத்தோ பி.கே. சுப்பையாவிற்கு கூஜா துக்கி, பினாங்கு மாநில மஇகா இளஞ்ர் பிரிவு தலைவர் அறிக்கை விடுத்திருப்பதில், எந்தவொரு ஆச்சரியமும் இல்லை. இருப்பினும், கூஜா துக்கும் தனது வேலையை எந்தவொரு பிழையுமின்றி செய்ய வேண்டும் என்பது தினகரனுக்கு தெரியாமல் போனதுதான் ஆச்சரியம். எனக்கு அரசியல் அரிச்சுவடி தெரியாது என்று கூறியிருக்கும், தினகரன்தான் மாபெரும் அரசியல் மேதையாயிற்றே, அவர் எப்படி தனது அறிக்கைகளில் தவறு செய்யலாம் ?
ஜனநாயக செயல் கட்சியை நேற்று பெய்த மலையில் இன்று பூத்த காளான் என்று கூறியிருப்பதில் தினகரனின் தலைக்கனம் தெரிகின்றது. ஐயா, அரசியல் மேதை தினகரனே, ஊம்முடைய வயதை விட ஜசெகவின் வயது அதிகம். 44 வருட போராட்ட வரலாற்றைக் கொண்டது ஜசெக. ஜனநாயக செயல் கட்சியின் மக்கள் போராட்டத்தில் சிறை சென்ற தலைவர்கள் எத்தனை பேர் என்று அரசியல் மேதை தினகரனுக்கு தெரியுமா? மலேசிய தமிழர்கள் மட்டுமின்றி, உலகத் தமிழர்கள் பலரிடமும் புகழ் பெற்ற தொழிற்சங்க போராட்டவாதி டாக்டர் வி.டேவிட், சிம்மக்குரலோன் பி.பட்டு, கொண்டிருந்த கட்சி ஜசெகதான். ஜெலுத்தோங் சிங்கம் கர்ப்பால் சிங், லிம் கிட சியாங் போன்ற உன்னதமான போராட்டவாதிகளை தன்னகத்தே கொண்டு இன்றும் மக்களுக்கு போராடும் கட்சிதான் ஜசெக. ஜசெகாவின் போராட்ட வரலலற்றில் உரிமைகளை கேட்டதற்காக சிறை சென்றவர்களில், இன்றைய பினாங்கு முதல்வர் லிம் குவான் எங்கும் ஒருவர். இந்த வரலாற்று சம்பவங்கள் நடந்த பொழுதெல்லாம் தினகரன் கைசுப்பும் குழந்தையாக இருந்திருப்பார். அவ்வாறு இருந்தது தவறில்லை, வரலாற்றைத் தெரிந்துக் கொண்டு எதுவும் பேச வேண்டும். எதோ பேச வேண்டும், அறிக்கை விட வேண்டும் என்று பேசி, தான் ஒரு குறைகுடம் என்பதை தினகரன் நிருபித்துள்ளார்.
முடிந்து போன பிரச்சனையான கம்போங் புவா பாலா பிரச்சனையைப் பற்றி இன்னும் எத்தனை காலம்தான் இந்த மஇகா மேதைகள் பேசிக் கொண்டிருக்கப் போகிறார்கள்? கம்போங் புவா பாலா பிரச்சனையில், தேவையில்லாமல் மூக்கை நுழைத்து பிரச்சனைகள் புரிந்தது இந்த மஇகா கூட்டம்தான். கம்போங் பூவா பாலா மக்களுக்கு, அந்த கம்போங் புவா பாலா நிலத்திலேயே, சுமார் 6 இலட்சம் வெள்ளி பெறுமானமுள்ள இரட்டை மாடி வீடுகளை பெற்றுத் தந்து சாதனை புரிந்தது பினாங்கு மாநில மக்கள் கூட்டணி அரசு. அவ்வாறு கட்டப்படப் போகும் புதிய வீட்டமைப்பு பகுதி, புதிய புவா பாலா கிராமாம் என்றும் அழைக்கப்படும். இது மக்கள் கூட்டணி அரசின் சாதனை. அவ்வாறு இழப்பீட்டை பெற்றுக் கொடுக்க பேச்சுவார்த்தை நடந்துக் கொண்டிருந்த பொழுதே, கோலாலும்புரிலிருந்து வண்டி பிடித்து வந்து இங்கு தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்தியது மஇகாவினர்தான். அதற்கான அனைத்து வேலைகளையும் இங்கிருந்து கனக்கச்சிதமாக செய்து முடித்தவர்தான் இந்த அரசியல் மேதை தினகரன். இவர்களின் சாதனை தலைவர், ஒரு படி மேலே போய், கம்போங் புவா பாலா மக்களுக்கு 3.2 மில்லியன் ரிங்கிட்டை தர மஇகா தயார் என்று பெரிதாக அறிக்கை எல்லாம் விடுத்தார். அந்த வாக்குறுதி என்னவாயிற்று, அந்த வாக்குறுதியை நம்பித்தான், கம்போங் புவா பாலாவின் 9 குடும்பங்கள் பினாங்கு மாநில அரசு பெற்றுக் கொடுத்த 6 இலட்சம் வெள்ளி பெறுமானமுள்ள இழப்பீட்டை வேண்டாம் என்றனர். அதற்கு முதலில் பதில் கூறுங்கள் அரசியல் மேதையே.
பிறகு, டத்தோ சுப்பையாவின் பெயரை எதோ நான் வேண்டுமென்று டத்தோ கருப்பையா என்று எழுதி விட்டதை போல அறிக்கை விடுத்துள்ளார் அரசியல் மேதை தினகரன். அது நாளிதழ் அச்சில் ஏற்பட்ட பிழையாகத்தான் இருக்கும், என்பது எந்தவொரு அடிப்படை அரசியல் தெரிந்த மனிதனுக்கும் தெரியும், ஆனால் மாபெரும் அரசியல் மேதை தினகரனுக்கு தெரியாமல் போனது ஆச்சரியம்தான். பினாங்கு மாநிலத்தின் maஇகா தலைவர் டத்தோ சுப்பையாதான் என்பதும் எனக்கு தெரியும், அவர் கவுன்சிலராக, சட்டமன்ற உறுப்பினராக, ஆட்சிக்குழு உறுப்பினராக செய்த சாதனைகளும் எனக்கு தெரியும். செபராங் பிறை நகராண்மைக்கழக உறுப்பினராக இருந்த காலத்தில் இந்தியர்களுக்கு என்று எதுவுமே பேசாமல், பகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினராக இருந்த பொழுது தனது சொந்த தொகுதியில், சொந்த நிலத்திலிருந்த சிவன் கோவில் விரட்டியடிக்கப்பட்ட பொழுது வேடிக்கைப்பார்த்த, பினாங்கு மாநில முன்னாள் அரசாங்கம் கம்போங் புவா பாலா நிலத்தை கூட்டுறவு கழகத்திடம் தாரைவார்த்துக் கொடுத்த பொழுது, ஆட்சிக்குழு கூட்டத்தில் குறட்டை விட்டுக் கொண்டிருந்த டத்தோ சுப்பையாதானே? எனக்கு அவரையும் தெரியும் அவரை சுற்றி கூஜாத் துக்கி கொண்டிருந்தவர்களையும் தெரியும்.
பினாங்கு மாநில மூத்தக் குடிமக்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் நூறு ரிங்கிட் கொடுப்பதை, மிட்டாய் சாப்பிடவா என்று கேலி பேசியிருக்கிறார் தினகரன். மக்களோடு மாநிலத்தின் வளத்தை பங்கீட்டுக் கொள்ளும் மனம் கொண்டது பினாங்கு மக்கள் கூட்டணி அரசு, மாநில நிதி வளங்களை தங்களுக்கு தாங்களே பங்கீட்டுக் கொள்ளும் ஊழல் அரசாங்கம் யார் என்பது பினாங்கு மக்களுக்கு தெரியும். ஆகவே, உங்களின் கேலிப்பேச்சுகள் அனைத்தையும் நாங்களும் சரி, மக்களும் சரி, பெரிதாக எடுத்துக் கொள்ளப்போவதில்லை. குறைக்குடம்தான் தழும்பும் என்பதற்கு தினகரனும் அவரது அறிக்கையுமே மிகப்பெரிய உதாரணம். இருந்த பொழுதிலும், தினகரன் கூறியிருக்கும் ஒரு கூற்றில் உண்மை உள்ளது, சுனாமி என்பது அடிக்கடி ஏற்படாது. கடந்த முறை ஏற்பட்டது ஒரு சிறிய சுனாமிதான், அடுத்தப் பொதுத்தேர்தலில் ஏற்படப்போகும் அரசியல் பூகம்பத்தில் மக்கிப்போன ஆலமாரமான மஇகா வேரோடு சாயப்போகின்றது. குத்தகைகளுக்காக அரசியல் கட்சியில் சேர்ந்து வேற்று அறிக்கைகள் விட்டுக் கொண்டிருக்கும் சிலரின் ஆட்டத்தை அப்பொழுது நாங்களும் கண்கூட பார்க்கத்தான் போகின்றோம்.

Wednesday, March 24, 2010

பினாங்கு மாநில அரசாங்கம் பினாங்கில் உள்ள இந்தியர்களுக்கு எதுவுமே செய்ய வில்லை என்று கெடா மாநிலத்தில் சென்று கதையலந்திருக்கும் பினாங்கு மாநில மஇகா தொடர்பு குழு தலைவர் பி.கே.சுப்பையாவின் கூற்று நகைப்புக்குரியது.
பினாங்கில் இருந்து வண்டி பிடித்து கெடா மாநிலத்திற்கு சென்று பினாங்கு மாநில மக்கள் கூட்டணி அரசின் மீது சேற்றை அள்ளி வீசியிருக்கிறார் பினாங்கு மாநில மஇகா தொடர்பு குழு தலைவர் டத்தோ சுப்பையா. இவரின் பருப்பு பினாங்கு மாநிலத்தில் வேகாததால், கெடாவில் சென்று கதை அளந்திருக்கிறார்.
டத்தோ சுப்பையாவின் கூற்றை காண்கையில் இவர் இன்னும் பினாங்கு மாநிலத்தில்தான் இருக்கின்றாரா அல்லது துறவு சென்று விட்டு இப்பொழுதுதான் பினாங்கு மாநிலத்திற்கு திரும்பி வந்துள்ளாரா என்று கேட்க தோணுகின்றது. எதற்கெடுத்தாலும் பினாங்கு மாநில மக்கள் கூட்டணி அரசின் மீது சேற்றை வாரி வீசும் வேலையை பினாங்கு மாநில தேசிய முன்னணி கட்சிகள் கண்ணும் கருத்துமாய் செய்து வரும் வேளையில், பினாங்கு மாநில மஇகா அந்த வேளையில் மிக மும்முரமாக செயல்பட்டு வருகின்றது என்பதைத்தான் சுப்பையாவின் கூற்று காட்டுகின்றது. ஆட்சி பொறுப்பை ஏற்ற கடந்த இரண்டு வருடங்களில் எந்த இனத்தையும் புறக்கணிக்காமல், பினாங்கு மாநில மக்களின் மன ஓட்டத்திற்கேற்ப பல அறிய திட்டங்களை மாநில முதல்வர் லிம் குவான் எங்க, துணை முதல்வர்கள் பேராசிரியர் இராமசாமி, மனசோர் ஒத்மான், மற்றும் ஆட்சிக்குழு உறுப்பினர்கள் மிக சிறப்பாக செயல்படுத்தி வருகின்றமை பினாங்கு மாநில மக்கள் அறிவார்கள். பினாங்கு மாநில அரசின் மக்கள் நல திட்டங்களையும் குறை கூறி அவற்றை எவ்வேரானும் கெடுத்து விட வேண்டும் என்று குறியாய் இருப்பவர்களின் புலம்பல்கள்தான் இவ்வாறான கூற்றுகள் என்பதை இங்கே நினைவு கூற வேண்டும்.
பினாங்கு மாநிலத்தில் மக்கள் கூட்டணி அரசாங்கம் இந்தியர்களுக்கு எதுவுமே செய்யவில்லை என்பது சுப்பையாவின் மிகப்பெரிய பொய். கடந்த ஆட்சியின் பொது பல்வேறான அடக்குமுறைகளுக்கும் உள்ளாக்கப்பட்ட பினாங்கு மாநில இந்தியர்கள் இன்று தலை நிமிர்ந்து நடக்கிறார்கள் என்றால் அதற்கு காரணம் பினாங்கு மாநில மக்கள் கூட்டணி அரசேயன்றி, இந்தியர்களின் குரல் என்று தம்பட்டம் அடித்துக்கொள்ளும் மஇகாவோ அதன் மாநில தலைவரான சுப்பையாவோ அல்ல. பினாங்கு தீவில் அமைந்துள்ள அசாத் தமிழ்ப்பள்ளிக்கு நாங்கள் நிலம் வழங்கிவிட்டோம், அதை செய்தோம், இதை செய்தோம் என்று தொடர்ந்து பொய்களை மட்டுமே முன்னாள் தேசிய முன்னணி அரசாங்கம் கூறி வந்தது. ஆனால், அந்த நிலத்தை சட்டப்பூர்வமாக அசாத் தமிழ்ப்பள்ளிக்கு வழங்கியது மக்கள் கூட்டணி அரசாங்கம்தான். அதற்கு பெரும் முயற்சிகளை மேற்கொண்டவர் இன்றைய துணை முதல்வர் பேராசிரியர் இராமசாமியேயன்றி, இந்த சுப்பையா இல்லை.
பினாங்கு மாநில மக்கள் கூட்டணி அரசின் கீழ் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், திட்டங்கள். :-
  1. மலேசிய சரித்திரத்தில் முதன்முறையாக தமிழ்ப்பள்ளிகளுக்கு வருடாந்திர நிதிநிலை அறிக்கையில் (Budget) ஒதுக்கீடு வழங்கியது பினாங்கு மாநில அரசுதான் என்பது சுப்பையாவிற்கு மட்டும் தெரியாமல் போனது எப்படி? கடந்த ௨௦௦௯ ஆம் ஆண்டு ௧.௫ மில்லியன் ரிங்கிட்டை பினாங்கிலுள்ள ௨௮ தமிழ்ப்பள்ளிகளுக்கு ஒதுக்கியது. அதே போல அந்த ஒதுக்கீடு ௨0௧0 ஆம் ஆண்டு, ௧.௭௫ மில்லியனாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தியெல்லாம் பத்திரிகைகளில் வருகின்றது, இதையெல்லாம் டத்தோ சுப்பையா படிப்பதே கிடையாதா?
  2. மலேசியாவில் முதன்முறையாக சாலை பெயர்பலகைகளில் தமிழுக்கும் இடம் தந்ததும் பினாங்கு மாநில அரசுதான். பினாங்கு நகரில் சுற்றி பார்த்தாலே அது தெரியும். daththo சுப்பையா பினாங்கு நகருக்குள் சென்று ரொம்ப நாட்கள் ஆகின்றதோ?
  3. பினாங்கு மாநிலத்தில் உள்ள தமிழ், தமிழர் சார்ந்த, உண்மையிலேயே மக்களுக்கு சேவை செய்யும் அரசு சாரா இயக்கங்களுக்கு ஒதுக்கீடு வழங்கி வருவதும் பினாங்கு மாநில அரசுதான். நம்மை அணுகும் பல்வேறு இயக்கங்களும் இது போன்ற ஒதுக்கீடுகள் கடந்த காலங்களில் எட்டாக்கனியே என்பதை கூறுவது டத்தோ சுப்பையாவிற்கோ எதோ தெரியாதுதான்.
  4. பினாங்கு மற்றும் செபராங் பிறை நகராண்மைக் கழகத்தின் அங்காடி கடைகள் மற்றும் உரிமங்கள் ௩௦௦க்கும் மேற்பட்ட இந்தியர்களுக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்துள்ளன. டத்தோ சுப்பையா ஆட்சிக்குழு உறுப்பினராக இருந்த காலத்தில் இந்த எண்ணிக்கை ௩௩௦க்கும் குறைவாகவே இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதே செபராங் பிறை நகராண்மைக் கழகத்தில் உறுப்பினராக இருந்த டத்தோ சுப்பையா அவர் காலத்தில் எத்தனை இந்தியர்களுக்கு அங்காடி கடைகள், உரிமங்கள் வழங்கப்பட்டது என்பதை குறிப்பிடுவாரா?
  5. பினாங்கில் உள்ள ஆலயங்கள் கடந்த காலங்களில் எப்படியெல்லாம் நடத்தப்பட்டன என்பது டத்தோ சுப்பையாவிற்கு தெரியாதா? கடந்த ஆட்சியில் இவரின் சொந்த தொகுதியான பாகான் டாலாம் சிவன் ஆலயம் சொந்த நிலத்திலிருந்து விரட்டப்பட்டதே, அப்பொழுது இந்த சுப்பையா என்ன செய்தார்? இன்று அந்த ஆலயத்திற்கான நிலத்தை வழங்கும் அடிப்படை வேளைகளில் பினாங்கு மாநில மக்கள் கூட்டணி அரசுதான் முன்னெடுத்தது. இதே போல், எத்தனை ஆலயங்களை கழிவு நீர் குட்டைகளுக்கு அருகில் இடம்பெயர வைத்திருப்பார்கள்? அப்பொழுதெல்லாம் டத்தோ சுப்பையா என்ன செய்துக் கொண்டிருந்தார்? இன்று இந்து ஆலயங்களை அவ்வாறு நடத்துவதற்கு எவனுக்காவது தைரியம் உண்டா? இல்லை; ஏன் தெரியுமா? பினாங்கு மக்கள் கூட்டணி அரசில், இந்தியர்களின் பிரதிநிதிகளாக உள்ளவர்கள் உங்களை போன்ற தலையாட்டி பொம்மைகள் அல்ல.
  6. இன்று வரையிலும், பினாங்கில் உள்ள தமிழ்ப்பள்ளிகளுக்கு நிலம் வழங்கும் திட்டங்களையும் முனைப்புடன் செயல்பட்டு வருவது மக்கள் கூட்டணி அரசுதான். தனியாரிடம் உள்ள நிலத்தை கையகப்படுத்தி தமிழ் பள்ளிகளுக்கு வழங்கவும் மாநில அரசு தயாராக உள்ளது. இது போல தேசிய முன்னணி அரசு எத்தனை தமிழ் பள்ளிகளுக்கு நிலம் ஒதுக்கியது? டத்தோ சுப்பையா அறிக்கை தருவாரா?
  7. பினாங்கு மாநில அரசாங்க துறைகளிலும், மாநில அரசாங்கத்தின் நிறுவனங்களிலும் இந்தியர்களுக்கு வேலை வாய்ப்பு எவ்வாறு பெருகியுள்ளது என்பதை நீங்களே நேராக சென்று காணலாம். எத்தனை இந்தியர்கள் பினாங்கு மாநில அரசாங்கத்தின் நிறுவனங்களில் உயர் பதவிகளில் உள்ளனர் என்பதை டத்தோ சுப்பையா கொஞ்சம் கணக்கெடுத்து விட்டு பிறகு பேசினால் நன்றாக இருக்கும்.
  8. பினாங்கு மாநிலத்தில் வாக்களிக்கும் ௬0 வயதுக்கும் மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு, இன வேறுபாடு பார்க்காமல் ஒவ்வொரு வருடமும் ௧00 ரிங்கிட் வழங்குகின்றது பினாங்கு மாநில அரசுஇதில் பல இந்தியர்களின் பெயரும் அடங்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. டத்தோ சுப்பையா இந்த திட்டத்திற்கு தனது பெயரையும் பதிந்து கொண்டு பிறகு, நாங்கள் செய்கின்றோமா இல்லையா என்பதை கூறலாம்.

இப்படி மக்கள் கூட்டணி பினாங்கு மாநில அரசு நடவடிக்கைகளின் சாதனைகளை அடுக்கிக் கொண்டே போகலாம். இதற்கெல்லாம் முதலில் டத்தோ சுப்பையா பதில் கூறட்டும், பிறகு எங்களின் சாதனைகளை நாங்கள் பட்டியலிடுகிறோம். பினாங்கு மாநில மக்கள் கூட்டணி அரசு இந்தியர்களுக்கு எதுவுமே செய்யவில்லை என்று பச்சையாக பொய் பேசியிருக்கும் டத்தோ சுப்பையாவிற்கு நாங்கள் ஒன்று கூற விரும்புகிறோம். நாங்கள் மக்கள் சேவையே மகேசன் சேவை என்று எங்களின் வழியில் போய் கொண்டிருக்கின்றோம். மக்களுக்கு மட்டுமே சேவை செய்து வரும் நாங்கள், நித்தியானந்தா போன்ற சாமியார்களை அழைத்து வந்து மக்களுக்கு பிரசங்கம் செய்யவில்லை; அவ்வாறு பினாங்கு மாநிலத்தில் பெரிய, பெரிய பிரசங்கமெல்லாம் நடத்தியது யாரென்பதை மக்கள் அறிவர்.

பினாங்கு பொதுமக்களிடத்தில் தனது பேச்சு எடுபடாது என்பதால்தான், தனது கட்சிக்காரர்களிடம் டத்தோ சுப்பையா ஏதேதோ உளறி வருகிறார். அவர்களும், அதை ஆர்வமில்லாமல் கேட்டுக்கொண்டிருக்கின்றனர். முடிந்தால் டத்தோ சுப்பையா தனது வழக்கறிஞ்சர் தொழில் முனைப்பு காட்ட வேண்டும்; இல்லையென்றால் தனது ஒய்வு காலத்தை முறையாக கழிக்க வேண்டும், அதை விடுத்து ஊர் ஊராக சென்று நித்தியனாந்தாவை போல பொய் பிரசாரமும், பிரசங்கமும் செய்துக் கொண்டிருக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கின்றோம்.

Monday, March 22, 2010

மூத்த குடிமக்களுக்கான வெகுமதி திட்டம்

பரிவு கொண்டுள்ளோம்

30 மக்கள் நல கொள்கைகள்

Friday, February 5, 2010

கோயம்பூத்துரிலிருந்து நமது நிருபர் த.மேத்தியுஸ்.

கோயம்பூத்துரிலிருந்து நமது நிருபர் த.மேத்தியுஸ்.

பிப்ரவரி 6 2010

தமிழகம் கோவையில் இன்று தொடங்கும், உலகத் தமிழர் பாதுகாப்பு மாநாட்டில் கலந்துக்கொள்ள, மலேசியாவிலிருந்து பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் இராமசாமி தலைமையில் 30 பேர் பேராளர் குழுவினர் இங்கு வந்து சேர்ந்தனர். நேற்று நண்பகல், கோயம்பூத்தூர் விமான நிலையம் வந்தடைந்த பேராசிரியர் அவர்தம் குழுவினரையும், ஏற்பாட்டுக்குழு தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி மற்றும் ஆதரவாளர்கள், மலேசியப் பேராளர்களுக்கு வீர வரவேற்பு வழங்கினர்.

மாநாட்டின் முதல்நாளான இன்று (6-2-2010) பேராசிரியர் இராமசாமி அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்து பேருரை ஆற்றுவார். உலக முழுவதிலும் இருந்து இம்மாநாட்டில் கலந்துக்கொள்ள வந்த வண்ணம் உள்ளனர். இதில், பழ.நெடுமாறன், மதிமுக பொதுச்செயலர் வைகோ, இயக்குனர் சீமான், இலங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் இரா.சம்பந்தன், இலங்கை தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

மலேசியாவிலிருந்து வந்திருக்கும் பேராளர் குழுவில், ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினர் குலசேகரன், பேராக் சட்டமன்ற உறுப்பினர் சிவநேசன், நெகிரி குணா, ஹிண்ட்ராஃப் தலைவர்கள் வி.கணபதி ராவ், கே.வசந்தக்குமார், பினாங்கு மாநில பிரமுகர் டத்தே அருணாசலம், ஐபிஎப் மதியழகன், ஜெயபாலன், கவுன்சிலர் இராமச்சந்திரன், வழக்கறிஞர் மங்களேஸ்வரி, சத்தீஸ் முனியாண்டி மேலும் பலர் கலந்துக்கொள்கின்றனர்.

பட விளக்கம் :

மாநாட்டு சம்பந்தமாக பிடிக்கப்பட்ட படங்கள்

Monday, February 1, 2010

nuihn

வசந்தக்குமார் கிருஷ்ணன் நிருபர் பழனிசாமி அமைச்சர்